செய்திகள் :

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

post image

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார்.

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சித்தும் அவர் பேட்டி அளித்திருந்தார்.

பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என பேசியிருந்தார். இந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல்ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அதிமுக தனது கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்.

அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் போட்டி போடுவதே பாஜவின் திட்டம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற என் மனதின் ஆதங்கத்தை தலைமைக்கு தெரிவித்தேன். பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர்.

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை; அரசு தரப்பின் தோல்வி

இதனிடையே அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Anwar Raja joined the DMK on Monday at the Anna Arivalayam in Chennai in the presence of DMK president and Chief Minister Stalin.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!

சென்னை: சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூலை 21) கால... மேலும் பார்க்க

முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகேவுள்ள நாரணாபுரம் - அனுப்பங்குளம் சாலையில் அமைந்துள்ள பட்டா... மேலும் பார்க்க

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க