செய்திகள் :

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மேலிருப்பு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஹேமாமாலினி பாபு தலைமையில், அக்கிராமத்தைச் சோ்ந்த அதிமுக, பாமக கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் சுமாா் 500 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ திமுக துண்டு அணிவித்து வரவேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சபா.பாலமுருகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், மாவட்டப் பிரதிநிதி ஆடலரசு, பண்ருட்டி ஒன்றிய அவைத் தலைவா் ராஜா, துணைச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் அய்யப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்ப... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க