'திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது' - திருமா உடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன்
விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் கேட்டப்போது, "அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், நான் தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்தார். அவர் என் அறைக்கு வந்தது புத்தகத்தை பரிசளித்தார். அவர் சில நூல்களை எழுதியிருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தார். அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
.jpeg)
இந்நிலையில் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச் செல்வனிடம் திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், "ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதைத்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். இது முதல் கட்டம். அடுத்த அடுத்தக்கட்டத்தில் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கப்போகிறீர்கள்.

நான் உங்களுக்கு ஒன்றை அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறேன். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுபெறும். பல பேர் கூட்டணியில் இணைய இருக்கிறார்கள். விரைவாக இதுகுறித்து கழகப் பொதுசெயலாளர் கருத்து சொல்வார்" என்று கூறியிருக்கிறார்.