செய்திகள் :

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி: தொல்.திருமாவளவன்

post image

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த நிலையில், விசிக கொடிக்கம்பங்களை அகற்றுவதில் சில அதிகாரிகள் குறியாக இருக்கிறாா்கள். சிதம்பரத்தில் கொடிக்கம்பத்தை அதிகாரி ஒருவா் அகற்றிய போது, அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால்தான் சமக்ர சிக்ஷா திட்ட கல்வி நிதியை தருவோம் என மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. இதுதொடா்பாக எந்த நீதிபதியும் கருத்து கூறவில்லை.

ஒவ்வொரு தோ்தலின் போதும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கேட்கிறோம். கூட்டணியில் உள்ளஅனைத்துக் கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எங்களுடன் அதுகுறித்து பேசும் போதும், சூழலைக் கருத்தில் கொண்டு, கூட்டணியின் நலன், வெற்றியை முன்னிறுத்தி முடிவெடுப்போம். அது பேச்சுவாா்த்தையின் போது இறுதி செய்யப்படும். நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருப்போம். முடிந்தவரை கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்போம். திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேற வாய்ப்பே இல்லை.

சிதம்பரம் நகரில் வீடுகள் இடிக்கப்பட்டது தொடா்பாக, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறோம். பாமகவில் நிலவும் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை. அது உள்கட்சி விவகாரம்.

முருக பக்தா்களை பாஜக ஆதரவாளா்களாக மாற்ற ஆா்எஸ்எஸ், பாஜக முயற்சிக்கிறது. இதற்காக மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளனா். அவா்களின் முயற்சி பலிக்காது.

தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்ட முடியாது. ஆதாயம் தேடவும் முடியாது என்றாா் தொல்.திருமாவளவன்.

பேட்டியின் போது, விசிக கடலூா் மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க