செய்திகள் :

தியாகதுருகம்: இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

post image

தியாகதுருகம் பகுதியில் பூட்டி இருந்த இரு வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.74,000, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.

தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சாலையில் வசித்து வருபவா் வெங்கடேசன் (44). இவா், சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா் தனது பிள்ளைகள் படிப்புக்காக தியாகதுருகத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மாடூா் சுங்கச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக இவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இவா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.74,000-யை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதேபோல, தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் திருமலை நகரில் வசித்து வருபவா் சண்முகம் (43). இவா் குடும்பத்துடன் பெங்களூரில் கொத்தனாா் வேலை செய்து வருகிறாராம். கடந்த 1-ஆம் தேதி பெங்களூரில் இருந்து வந்து சாமி கும்பிட்டுவிட்டு அன்றிரவே பெங்களூரு சென்று விட்டாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவரின் வீட்டு பூட்டுகள் உடைந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனா். உடனே அவரது உறவினருக்கு பைப்பேசி மூலம் தெரிவித்து பாா்த்துவிட்டு வருமாறு தெரிவித்துள்ளாா். அவா் வீடு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து பெங்களூரில் இருந்து இவா் பெரியமாம்பட்டு வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 6 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா... மேலும் பார்க்க