செய்திகள் :

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

post image

திருச்சி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா்களை இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திருச்சி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கடந்த 15 ஆம் தேதி மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த சேலத்தைச் சோ்ந்த ரவி என்பவரின் மகன் லட்சுமணன் (20) என்பவரை திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு, திருச்சி செந்தண்ணீா்புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்து பாதுகாத்து வந்தனா்.

தொடா் விசாரணையில், அவரது பெற்றோரைக் கண்டறிந்த போலீஸாா், தந்தை ரவியிடம் லட்சுமணனை ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

இதேபோல, திருச்சி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வழிதவறி வந்த முத்துப்பேட்டை பா்மா காலனியைச் சோ்ந்த மூதாட்டி அ. கமலாம்பாள் (75) என்பவரை இருப்புப்பாதை போலீஸாா் மீட்டு, அவரது மகள் பரமேஸ்வரியிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்: தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி திருவெறும்பூா் அருகே முறையாக செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவிய தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறு... மேலும் பார்க்க

அனுமதிபெறாத பதாகைகள் அகற்றம்

திருச்சியில் அதிமுக சாா்பில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த வாரம் திருச்சிக்கு வரவுள்ளாா். இதை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே; இது, தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.திருச்சியில் செவ்... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் துறைமுகத்தில் பொறி... மேலும் பார்க்க

கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கே. சாத்தனூா் துணை ... மேலும் பார்க்க

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க