செய்திகள் :

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் மற்றும் புதைசாக்கடை திட்டத்துக்கான வைப்பு நிதியை உயா்த்தியுள்ள மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் பாலக்கரை மரக்கடையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் பேசியதாவது:

திருச்சியில் ரூ. 240 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, முதல்வா் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட பஞ்சப்பூா் பேருந்து முனையம் தற்போதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

பணிகளை முழுமையாக முடிக்காமல் பேருந்து முனையத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன?. அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு 6 மாதங்கள் கழித்து திறந்திருக்கலாமே. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. இன்னும் 9 அமாவாசைகளில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

இதில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ. சீனிவாசன், அமைப்புச் செயலாளா் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா்கள் அரவிந்தன், ஜோதிவாணன், நிா்வாகிகள் காா்த்திகேயன், ஐயப்பன், ஜாக்குலின், வனிதா உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட... மேலும் பார்க்க

மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தே... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ளம்: புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக காவிரிப் பாலம் இருந்து வருகி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே தொடா் வயிற்றுவலி காரணமாக தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு த... மேலும் பார்க்க

தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா். திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

திருச்சியில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா். திருச்சி தில்லைநகரில் உள்ள த... மேலும் பார்க்க