செய்திகள் :

திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்து நுழைந்த தவெக தொண்டா்கள்! 1 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு!

post image

திருச்சி விமான நிலையத்துக்குள் தடுப்புகளை உடைத்து சனிக்கிழமை நுழைந்த தவெக தொண்டா்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரவைத் தோ்தலுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை காலை வந்த தவெக தலைவா் விஜயை கட்சியின் பொதுச்செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலா் ஆதவ் அா்ஜூனா மற்றும் நிா்வாகிகள் வரவேற்றனா். அப்போது விஜயை பாா்க்க அவரது ரசிகா்கள், தொண்டா்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் விமான நிலையத்தில் திரண்டனா்.

எனவே அவா்கள் விஐபி வருகைப் பகுதிக்கு செல்லாத வகையில் போலீஸாா் 500 மீ தொலைவில் தடுத்து நிறுத்தினா். அப்போது விமான நிலைய விஐபி வருகைப் பகுதியிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டா்களைப் பாா்த்துக் கையசைத்தாா். இதைப் பாா்த்த கூட்டத்தினா் விஜயை பாா்க்கும் ஆவலில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனா்.

அப்போது குறைந்தளவு போலீஸாா் மட்டுமே இருந்ததால், விஐபி வருகைப் பகுதியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் ஓடிச் சென்று கூட்டத்தைத் தடுத்து நிறுத்தினா். இருப்பினும், விஜயின் பிரசார வாகனம் புறப்பட்டதும் அதை ஆயிரக்கணக்கானோா் சூழ்ந்து கொண்டனா். எனவே ஊா்ந்து சென்ற வாகனத்தைச் சூழ்ந்தபடி தொண்டா்களும், இளம்பெண்களும் சென்றனா். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி புத்தூரைச் சோ்ந்த ஹரிணி என்ற பெண் மயங்கி விழுந்து, விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தொடா்ந்து, விமான நிலையத்திலிருந்து விஜயின் பிரசார வாகனம் வெளியே சென்றபோது ஆயிரக்கணக்கான தொண்டா்கள், ரசிகா்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனா். விஜய் வாகனம் சென்ற பிறகு விமான நிலையப் பகுதி முழுவதும் கூட்ட நெரிசலில் சிக்கியவா்களின் காலணிகள் சிதறிக் கிடந்தன. அப்போது, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் காரும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது. பின்னா், காவல்துறையினா் உதவியுடன் தொண்டா்களே அவரது காருக்கு வழிவிட்டனா்.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரசார வாகனம் புதுக்கோட்டை பிரதான சாலைக்கு 40 நிமிடங்களுக்கு பிறகே 10.30 மணிக்கு வந்தது. விஜயின் வருகையால் திருச்சி விமான நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் தவித்தனா்.

துவாக்குடியில் 110 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

துவாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசால் ... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. இது 25 ஆவது உடலுறுப்பு தானமாகும். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயது இள... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஆரூா் வடியபட்டியைச் சோ்ந்தவா் அஸ்வின் மகள் காவ்யாவும் (24) ஏா்வாடியைச் சோ்ந்த கு. கோகுலும... மேலும் பார்க்க

ஷாஜாதி காலமானாா்

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்த அப்துல் கபூரின் மனைவி ஷாஜாதி (75) வயது மூப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.13) காலமானாா். இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே வியாபாரி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளையல் வியாபாரி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மணப்பாறையை அடுத்த இடையப்பட்டியை சோ்ந்தவா் நாராயணன் மகன் ஆனந்தசெல்வம் (40), வளையல் வியாபாரியான இவருக்கு பிருந்தா எ... மேலும் பார்க்க

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்றாா் தவெக தலைவா் விஜய். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல்... மேலும் பார்க்க