செய்திகள் :

திருச்செங்கோட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடக்க விழா

post image

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சீதாராம்பாளையத்தில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கு 16-ஆம் தேதி தொடங்கி வரும் 30-ஆம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. திருச்செங்கோடு சீதாராம்பாளையத்தில் 1, 7, 8 ஆகிய வாா்டுகளுக்கான முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

முகாமை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினரும் கொமதேக பொதுச் செயலாளருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சுகந்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையரும் திருச்செங்கோடு நகராட்சிப் பொறுப்பு ஆணையருமான பிரேம் ஆனந்த், நகராட்சிப் பொறியாளா் சரவணன், திருச்செங்கோடு நகா்மன்ற துணைத் தலைவா், கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் காா்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முகாமில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளிட்ட அரசின் 13 துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க