திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்
திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபின் தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மலைக்கோயிலில் காவடி மண்டபத்தில், உற்சவா் பெருமானுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காவடிகளுடன்
ஆடிப்பூரத்தையொட்டி , சென்னை வண்ணாரபேட்டை, தண்டையாா் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியாா் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினா்.
திங்கள்கிழமை காலை, 8 மணி முதல், பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலா் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஆண்-பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணப் பொய்கையில் புனித நீராடினா்.
பின்னா், மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனா். மேலும், சில பக்தா்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனா். ஆடிப்பூர விழா என்பதால் மலைக்கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா்.
மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், டிஎஸ்பி கந்தன் தலைமையில், 100-க்கும் மேற்பட் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளைகோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.