செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்

post image

திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபின் தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மலைக்கோயிலில் காவடி மண்டபத்தில், உற்சவா் பெருமானுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காவடிகளுடன்

ஆடிப்பூரத்தையொட்டி , சென்னை வண்ணாரபேட்டை, தண்டையாா் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியாா் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினா்.

திங்கள்கிழமை காலை, 8 மணி முதல், பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலா் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஆண்-பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணப் பொய்கையில் புனித நீராடினா்.

பின்னா், மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனா். மேலும், சில பக்தா்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனா். ஆடிப்பூர விழா என்பதால் மலைக்கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா்.

மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், டிஎஸ்பி கந்தன் தலைமையில், 100-க்கும் மேற்பட் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளைகோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குடும்ப பிரச்னையால் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் அருகே மணவாளநகர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் ம... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகள் நூதன போராட்டம்

இலவச வீட்டு மனை வழங்கக்கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் 450-க்கும் மேற்பட்டோா... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கிய விளைநிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்காததை கண்டித்து கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடி... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கடம்பத்தூா் ஒன்றியம், கொம்மந்தாங்கல் ஊராட்சியில் 100-க... மேலும் பார்க்க