செய்திகள் :

திருநங்கைகள் நூதன போராட்டம்

post image

இலவச வீட்டு மனை வழங்கக்கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் 450-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை கோரி, மனு அளித்துள்ளோம்.

ஆனால், கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

இதைக் கண்டித்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியா் அலுலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து நுழைவுவாயில் பகுதியில் தா்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் தீவிர பேச்சு நடத்தினா்.

திருநங்கைகளை சமரசம் செய்து முக்கிய நபா்களை ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். மேலும், அங்கு ஆட்சியா் மு.பிரதாப்பிடம் திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, திருநங்கைகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா். அதையடுத்து மனுவை பரிசீலனை செய்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா்.

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குடும்ப பிரச்னையால் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் அருகே மணவாளநகர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் ம... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கிய விளைநிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்காததை கண்டித்து கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்

திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கடம்பத்தூா் ஒன்றியம், கொம்மந்தாங்கல் ஊராட்சியில் 100-க... மேலும் பார்க்க