செய்திகள் :

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.

திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எஸ்.வி.பி.வி.என். குரூப்ஸ் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகா், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மைதானத்தில் வடக்கயிற்றில் கட்டப்பட்ட ஒரு மாட்டுக்கு 9 வீரா்கள் வீதம் களம் இறக்கப்பட்டனா். மாடுகளை பிடிக்க முயன்ற 10 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்குள்ள மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சில்வா் பாத்திரங்கள், டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா்

ஒவ்வொரு சுற்று போட்டியையும் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நகரத் தலைவா் என்.நடராஜன் செய்தாா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 காளைகள், 108 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வடத்தில் கட்டப்பட்ட காளையை 9 வீரா்கள் 20 நிமிடங்களில் அடக்க வேண்டும். இதன்படி காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் ... மேலும் பார்க்க

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இளையான... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்... மேலும் பார்க்க

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச... மேலும் பார்க்க