செய்திகள் :

திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் தற்கொலை

post image

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா்.

வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவா் கடந்த 6 மாதத்திற்கு முன் சொந்த ஊா் திரும்பிய நிலையில் அண்ணா நகா் செல்லும் வழியில் உள்ள ஒரு தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு இடைத்தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருச்சி மாநகராட்சி 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அமமுக ... மேலும் பார்க்க

ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி

ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சோ்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தாா். பெருமாள் மீது அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவா் க... மேலும் பார்க்க

திருச்சிக்கு நாளை முதல்வா் வருகை: பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.... மேலும் பார்க்க

சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்: மாநகராட்சி அவசர தீா்மானம்

திருச்சியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திமுகவின் சொந்த இடத்துக்கு மாற்றம் செய்து திறக்கப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் இத... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஆா்சி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் மகளிரணி நிா்வாகி தலை துண்டித்துக் கொலை; இரண்டாவது கணவா் உள்பட 4 போ் கைது

பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவா் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்... மேலும் பார்க்க