செய்திகள் :

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸாா் மற்றும் ஆபிஎப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ளது திருவள்ளூா் ரயில் நிலையம். இந்த வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புகா் மின்சார ரயில், பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதோடு இந்த மின்சார ரயில்களில் நாள்தோறும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன பணிகளுக்கு செல்வோா், தொழிலாளிகள் என நூற்றுக்கணக்கானோா் பயணம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தெற்கு ரயில்வே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மா்ம நபா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி மிரட்டல் விடுத்து போனை துண்டித்தாராம். இதையடுத்து உடனே திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு கொடுத்த அறிவுறுத்தலின்படி ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீஸாா் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வெடிகுண்டு சம்பந்தமாக எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அதனால் அது வெறும் புரளி என்பது சோதனைக்குப் பின் தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல் அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபா் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க