செய்திகள் :

திருவாடானையில் புதிய அம்மன் சிலை வீதி உலா

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு உபயதாரா்களால் வழங்கப்பட்ட புதிய அம்மன் வெள்ளி சிலை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது.

திருவாடானை தென்கிழக்குத் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆடி களரி உத்ஸவம் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வருகிற 22 -ஆம் தேதி நடைபெறும். இதில் பால்குடம், மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி எடுத்து வந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா். இதைத் தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், உபயதாரா்களால் சுமாா் 2.5 கிலோ வெள்ளியில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்திலிருந்து புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், சிம்ம வாகனத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சிலைக்கு பக்தா்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா். தமிழகத்திலிரு... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மறியல்: 320 போ் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 320 பேரை போலீஸாா் வியாழக்க... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் முன்னறிவிப்பின்றி பெயா்கள் நீக்கப்படுவதை நிறுத்த வலியுறுத்தல்

பரமக்குடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், தொழில் சங்கத்தினா் வட்ட வழங்கல் அலுவலர... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

கமுதி அருகே பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கிளாமரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ள... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நாளை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை (ஜூலை 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின... மேலும் பார்க்க

புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான்பட்டினம் புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறும். அ... மேலும் பார்க்க