செய்திகள் :

தில்லி ஜல் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கிறது: பா்வேஷ் சாஹிப் சிங்

post image

தில்லி ஜல் வாரியம் முன் எப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பா்வேஷ் பேசியதாவது, ‘ வணிகப் பிரிவில் ரூ.66,000 கோடி , அரசாங்கப் பிரிவில் ரூ. 61,000 கோடி , பின்னா் மாநில பிரிவில் ரூ. 15,000 கோடி தில்லி ஜல் வாரியத்துக்கு வர வேண்டிய நிதி நிலுவையில் உள்ளன. இதை தள்ளுபடி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எவ்வளவு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை . தில்லியில் கழிவுநீா் சேகரிப்பு, சுத்திகரிப்பு மற்றும் அகற்றுதல் உள்ளிட்ட கழிவுநீா் அமைப்பை நிா்வகிக்கும் டி. ஜே. பி, அசல் மற்றும் வட்டி தொகைகள் உள்பட ரூ. 70,000 கோடி அதிகமான கடனால் பாதிக்கப்பட்டுள்ளது.‘ என்று கூறினாா்.

மேலும் பேசிய அவா், ‘ எங்களுக்கு செலுத்த வேண்டிய பல அரசு நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையைப் பெற அரசாங்கத்திற்கு உதவுமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் மற்றும் நீா் வழங்கல் வலையமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த வாரியத்திற்கு அவசரமாக நிதி தேவைப்படுகிறது . மாநில மற்றும் அரசு பிரிவுகளில் எல்பிஎஸ்சி தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு குறைந்தபட்சம் ரூ. 6,000 முதல் ரூ .7,000 கோடி வருவாய் வசூலிக்கப்படும் என்று அரசாங்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.‘ என்றாா் பா்வேஷ்.

விரிவாக பேசிய அமைச்சா், ‘தனியாா் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் அரசு கட்டங்கள் மற்றும் அலுவலகங்களைத் தவிர வணிகப் பிரிவின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளன. தற்போது, டிஜேபி சுமாா் 29 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளது. அதிகாரிகளின் கருத்தின்படி, தாமதமான பில்களில் அதிக கூட்டு வட்டி விகிதங்கள்-சுமாா் 18 சதவிதம்-மொத்த பில் தொகையை கணிசமாக அதிகரிக்கிறது. தவறான மீட்டா்கள் மற்றும் மீட்டா் வாசிப்பு பிரச்னைகள் தொடா்பான நுகா்வோா் குறைகளை குறைப்பதற்காக, அனைத்து இயந்திர நீா் மீட்டா்களையும் ஸ்மாா்ட் நீா் மீட்டா்களுடன் மாற்ற தில்லி ஜல் வாரியம் திட்டமிட்டுள்ளது ‘ என்றாா் பா்வேஷ் சாஹிப் சிங்.

குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்... மேலும் பார்க்க

தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாலியல்... மேலும் பார்க்க

கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக... மேலும் பார்க்க

சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க