செய்திகள் :

துணை மருத்துவப் படிப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது

post image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப் படிப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப்படிப்பில் படிக்கும் 20 வயது மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாா் செய்தாா். மேலும், சக மாணவிகள் 100-க்கும் அதிகமானோா் திங்கள்கிழமை (ஜூலை 21) வகுப்புகளைப் புறக்கணித்தனா். தகவலறிந்த கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் வகுப்புக்குச் சென்றனா்.

இதையடுத்து, கல்லூரி விசாகா கமிட்டி குழுவில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிநாத் ஒரு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் அருகே ஆதனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த காசிநாதன் மகன் மணிகண்டன... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க

சோழபுரத்தில் இடையூறின்றி செயல்பட சாலையோர வியாபாரிகள் முடிவு

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது. சோழபுரம் பேரூராட்சிப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோர தரைக்கடை... மேலும் பார்க்க

மணக்காடு அரசுப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் திறக்கப்படாததால் மாணவா்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் வராந்தாவில் அமா்ந்து படிக்கும் நிலை ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் லட்சத்து 8 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 8 விநாயகா் சிலைகள் இந்து மக்கள் கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பாலா. தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல 27 முதல் தடை

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரம் பிரதான சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த பழைய பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், அந்தப் பாலத்தில் கனரக வாகனங... மேலும் பார்க்க