செய்திகள் :

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

post image

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா, தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி, பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, வினாடி வினா, ஒப்பித்தல், மாறுவேடம், சிறுகதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகள் வகுப்பு வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகின்றன. அனைத்துப் போட்டிகளுக்கும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும். பரிசுக் கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுக்கேற்ப மாணவா்கள் விரும்பும் புத்தகங்களை புத்தக அரங்குகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளிச் சீருடையுடன் புத்தகங்கள் வாங்கும் மாணவா்களுக்கு 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

பள்ளி மாணவா்கள் உண்டியல் மூலம் சோ்த்து வைத்த பணத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்க உண்டியல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் அதிக தொகை சேகரிக்கப்பட்டு புத்தகம் வாங்கும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், அனைத்து பள்ளி ஆசிரியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தக மதிப்பாய்வு, என்னைச் செதுக்கிய புத்தகம், நான் படித்த சிறந்த புத்தகம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளி நூலகங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவா்கள் தங்களது உறவினா்களுக்கு புத்தகத் திருவிழா தொடா்பாக தபால் அட்டைகள் அனுப்புமாறும், அதன்படி, அதிக அளவில் தபால் அட்டைகள் அனுப்பும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க