செய்திகள் :

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது ஊருக்குக் கிளம்பினார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகில் வந்த போது, பின்னால் வந்த கார், ரவிராஜ்குமாரின் பைக்  மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். ரவிராஜ்குமார் மீது மோதிய கார் அதே தேசிய நெடுஞ்சாலையில் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

விபத்தில் உயிரிழந்த ரவிராஜ்குமார்
விபத்தில் உயிரிழந்த ரவிராஜ்குமார்

இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விபத்து ஏற்படுத்திச் சென்ற கார் சிறிது தூரம் சென்றபோது அந்தக் காரில் உள்ள நம்பர் பிளேட் துணியால் மறைக்கப்பட்டுச் சென்ற போதிலும், அந்தக் காரின் நிறத்தை வைத்து அக்காரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த கார், ஒரு லாரியில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் ஏற்றிச் செல்வதை, அங்குள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இது குறித்து அந்த லாரியின் பதிவெண்ணை வைத்து அக்காரின் உரிமையாளரான அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியைச் சேர்ந்த க.சோலைச்சாமி என்பவரைப்  பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த காரை எட்டையபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.

சந்தேகத்தின்பேரில் தர்மராஜைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், குறுக்குச்சாலையில் விபத்து ஏற்படுத்திச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.  

விபத்து வழக்கில் போலீஸாரிடம் சிக்காமல் இருக்க அந்தக் காரை அருண்குமார், சுப்பாராஜ் ஆகியோர் உதவியுடன் காரை கார் புரோக்கரான சோலைச்சாமிக்கு விற்பனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அந்தக் கார் விபத்தில் இருந்து தப்பிக்க தரம்ராஜ், சோலைச்சாமி இருவரும் விபத்து நடந்த இரு நாட்களுக்கு முன்பு விற்பனை செய்துவிட்டதாக ஒப்பந்தப் பத்திரம் தயார்ப்படுத்தியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தரமராஜ், சோலைச்சாமி, அருண்குமார், சுப்பாராஜ் ஆகியோரைக் கைது செய்ததுடன், கார் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் - கேரள இளைஞர்கள் 2 பேர் கைது

வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்திவரப்படுவதாக அம்மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கையும் களவுமாக... மேலும் பார்க்க

Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்... என்ன நடந்தது?

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.பாகிஸ்தான் கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பல் சிகிச்சை; தொற்றுக்குள்ளாகி 8 பேர் மரணம் - சர்ச்சை கிளினிக்கிற்குப் பூட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர்... மேலும் பார்க்க

சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்ப... மேலும் பார்க்க

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ... மேலும் பார்க்க

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ... மேலும் பார்க்க