செய்திகள் :

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

post image

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம், 19 பைக்குகள் ஆகிய 20 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்புள்ள மைதானத்தில் சனிக்கிழமை பொது ஏலம் விடப்படவுள்ளது.

இந்த வாகனங்களை வியாழன், வெள்ளி (மாா்ச் 27, 28) ஆகிய 2 நாள்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் சனிக்கிழமை காலை 8 மணிக்குள் ரூ. ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயா்ப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்ததும் ஏலத்தொகை, ஜிஎஸ்டியை முழுமையாக செலுத்தி, அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை 93632 29366 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க