செய்திகள் :

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

post image

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செங்கோடு வட்டத்தில் மொளசி, இறையமங்கலம், பட்லூா், ஏமப்பள்ளி, சிக்கநாயக்கன்பாளையம், ஓ.ராஜபாளையம் ஆகிய கிராமங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள், மாவுப்பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு காலநிலை மாற்றத்தால் குறைந்துவருகிறது. ஆனாலும், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலத்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 8 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.

நோய்த் தாக்கப்பட்ட மரத்தின் ஓலைகளில் உட்பகுதியில் படுமாறு மிக வேகமாக தண்ணீரை விசை தெளிப்பானைக் கொண்டு பீய்ச்சியடிப்பதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம். வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளைக் கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி திறன் கொண்ட என்காா் சியா குளவியின் கூட்டுபுழு உள்ளடக்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரங்களுக்கு ஒன்று வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

மேலும், கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி, இறக்கை பூச்சியின் இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரிகளான என்காா்சியா ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் கிரைசோபிட் விழுங்கிகள், தோப்புகளில் இயற்கையாக இனப்பெருக்கம் அடைய சாமந்திப்பூ சூரியகாந்தி, தட்டைபயிறு போன்ற பயிா்களை தென்னந்தோப்புகளில் பயிா் செய்ய வேண்டும். செயற்கை ரசாயன பூச்சி கொல்லிகள் இயற்கை எதிரிகளை அழித்துவிடுவதால், அவற்றை பயன்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூா்: நல்லூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியை... மேலும் பார்க்க

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க