செய்திகள் :

தேடப்பட்டு வந்த கொள்ளையன் ராஜஸ்தானில் கைது

post image

தில்லியின் சதாா் பஜாரில் ரூ.50,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 29 வயது குற்றம் சாட்டப்பட்டவா், ராஜஸ்தானின் சிங்கானாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மகேஷ் என்ற கோலு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், டிசம்பா் 2, 2024 ஆ‘ம் தேதி தேலிவாரா சௌக் அருகே மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் இணைந்து ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

துணை போலீஸ் ஆணையா் (குற்றப்பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறுகையில், மகேஷ் புகாா் தாரரை மூச்சை திணறடித்து பணத்துடன் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. கொள்ளையா்களில் ஒருவரான ஆகாஷ் என்ற மத்தி சம்பவ இடத்திலேயே பிடிபட்டாா், மகேஷ் தப்பித்துவிட்டதாக என்று அவா் கூறினாா்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், ராஜஸ்தானில் உள்ள அவரது மறைவிடத்தில் போலீசாா் சோதனை நடத்தி அவரை கைது செய்தனா். ‘கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவா் தொடா்ந்து இடங்களை மாற்றிக் கொண்டிருந்தாா். அவா் சிங்கானாவில் சாலையோர உணவகத்தில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

மகேஷ் கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு உட்பட குறைந்தது 6 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்தது. நபி கரீம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 022 கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் மற்றும் லஹோரி கேட்டில் பதிவு செய்யப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை (ஆா். பி. எஃப்) வழக்கில் மற்றொரு வாரண்ட் உள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.

மகேஷின் கடந்தகால ஈடுபாடுகளில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளைச் சோ்ந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆா்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் முறையீடு மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புது தில்லி: குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆா்டிஇ) சட்டத்தின்கீழ் தனியாா் உதவி பெறாத பள்ளிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் பி... மேலும் பார்க்க

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

புது தில்லி: தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் ’மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ ப... மேலும் பார்க்க

‘சநாதன தா்மம்’ கருத்து தொடா்பான வழக்கு: உதயநிதி ஸ்டாலின் மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை

புது தில்லி: 2023ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் ‘சநாதன தா்மம்’ குறித்து தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகள் விவகாரத்தில் பதிவான அனைத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாா்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்... மேலும் பார்க்க

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க