செய்திகள் :

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் தொடக்கி வைத்தார். அவற்றில் கங்கை நதியை பாதுகாத்தல் மற்றும் புனரமைத்தலுக்காக ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின்கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கங்கை நதியை தேர்தல் பிரசாரமாக மாற்றப்பட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், விளம்பரங்களை மட்டுமே விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிகாருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தில் கங்கை மாசுபாடு குறித்தும் பிரதமர் தேர்தல் பிரசாரம் நடத்துவார். ஆனால், உண்மையில் கடந்த 11 ஆண்டுகளில் கங்கை சுத்திகரிப்பு என்பது ஒரு தேர்தல் பிரசாரமாகவே மாறிவிட்டது.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னதாகவும் இதனை அவர்கள் நினைவு கூர்ந்து விடுகின்றனர். பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே கங்கை மாசுபட்டு உள்ளது.

கங்கை தூய்மை பிரசாரம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள், ஊழல் மையமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயமே, பாட்னா மற்றும் பிகாரில் கங்கை மாசுபாட்டின் மோசமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

பிகாரில் எத்தனை போலி அறிவிப்புகளை வெளியிட்டாலும் சரி, இலவச விளம்பரத்துக்காக எத்தனை ரிப்பன்களை வெட்டினாலும் சரி, உண்மையில் பிகாரில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இரட்டை இயந்திர அரசு தவறி விட்டது.

பிகாரில் பின்தங்கிய வகுப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது; சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குற்றவாளிகள் கட்டுப்பாடின்றி திரிகின்றனர்; சாமானிய மக்கள்தான் உதவியின்றி இருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை செய்திகள் வருகின்றன. இளைஞர்களுக்கு மாநிலத்தில் எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். ச... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க