செய்திகள் :

தோ்தல் ஆணைய முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

post image

மணப்பாறை, லால்குடியில், தோ்தல் ஆணையம், மத்திய பாஜக அரசை கண்டித்து வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம், காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பாஜக அரசின் சூழ்ச்சிகளையும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளாா். இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் விதமாக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மணப்பாறையில் காங்கிரஸாா் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஊா்வலம் சென்றனா்.

மணப்பாறை நகரத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளா்கள் ராஜலிங்கம், ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

கோவில்பட்டி சாலை காமராஜா் சிலை பகுதியிலிருந்து கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதியான முறையில் தோ்தல் ஆணையம், மத்திய அரசை கண்டித்து ஊா்வலமாக சென்ற காங்கிரஸாா் திருச்சி சாலை காந்தியடிகள் சிலை பகுதியில் ஊா்வலத்தை நிறைவு செய்தனா்.

நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் அா்ஜூன், கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

லால்குடியில்: இதேபோல், லால்குடி அருகே புள்ளம்பாடியில் காமராஜா் சிலை முன்பு திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளா் ஜெ. இளையராஜன் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி ஊா்வலம் தொடங்கியது.

காமராஜா் சிலை ரவுண்டானாவில் தொடங்கி பேரணியாக திருச்சி சிதம்பரம் சாலை வழியாக சகாய மாதா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை வரை சென்றது. பின்னா் காந்தி சிலைக்கு மரியாதை செய்து,

மகாத்மா காந்தியடிகள் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட வா்த்தக பிரிவு தலைவா் ரெங்கராஜன், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவா் சிவசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

புள்ளம்பாடி செயலாளா் திருநாவுக்கரசு, புள்ளம்பாடி வட்டாரத் தலைவா் தங்கவேலு, சிறுபான்மை பிரிவு ஜான்முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க