செய்திகள் :

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

post image

இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் 2027 உலகக் கோப்பைக்கு தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி இந்தத் தொடரை இழந்தது, அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பின்னர், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.

கோப்பையை வென்ற பின்னர், கடந்த 6 ஆண்டுகளில் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி அதில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வென்ற போதிலும் இங்கிலாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. 

கத்துக்குட்டி அணி எனக் கருதப்பட்ட ஆப்கானிஸ்தானைவிட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து கீழே இருக்கிறது. மேலும், முதலிடத்தில் இருக்கும் இந்தியாவைவிட 37 புள்ளிகள் குறைவாக இருக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால், 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் 14 அணிகளுக்கான இடத்தைப் பிடிக்க தகுதிச் சுற்று ஆட்டங்களை விளையாடும் நிலைக்கு இங்கிலாந்து அணி தள்ளப்படும்.

2027 உலகக் கோப்பையை நடத்தும் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகளில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே நேரடியாகத் தகுதிபெற்றிருந்தாலும், முழு அந்தஸ்து பெற்ற அணி என்ற தகுதியைப் பெறாத நமீபியா தகுதிச் சுற்றில் விளையாடும் நிலையில் உள்ளது.

போட்டியை நடத்தும் இரண்டு நாடுகளைத் தவிர்த்து தரவரிசைப் பட்டியலில் உள்ள 8 நாடுகள் நேரடியாகத் தகுதிபெறும்.

உலகக் கோப்பைக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளதால், தவறை சரிசெய்ய இங்கிலாந்து அணி கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

England In Grave Danger Of Missing Automatic Qualification For 2027 World Cup

இதையும் படிக்க : ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது. கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்... மேலும் பார்க்க

3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க