செய்திகள் :

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

post image

இந்திய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ரூ.96,390 கோடி வருவாய் ஈட்டின. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14.07 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் ரூ.84,500 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரி செய்யப்பட்ட வருவாய் (ஏஜிஆா்) ரூ.67,835 கோடியிலிருந்து 14.89 சதவீதம் அதிகரித்து ரூ.77,934 கோடியாக உள்ளது.

கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.28,542.76 கோடி வருவாய் ஈட்டி முன்னிலை வகித்தது. பாரதி ஏா்டெல்லின் வருடாந்திர வளா்ச்சி விகிதம் 27.31 சதவீதமாக உள்ளது. ஜியோவை இது சுமாா் இரு மடங்கு அதிக வளா்ச்சி விகிதமாகும். அந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளா்ச்சி 14.8 சதவீதமாக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.26,073.7 கோடி ஏஜிஆரைப் பதிவு செய்தது. வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் 6.69 சதவீதம் அதிகரித்து ரூ.7,958.46 கோடியாகவும், பிஎஸ்என்எல் ஏஜிஆா் 13.95 சதவீதம் அதிகரித்து ரூ.2,292.47 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸொமாட்டோ அறிமுகப்படுத்தி, சப்தமில்லாமல் நிறுத்தி புதிய சேவை

ஸோமாட்டோ செயலியில் ஆர்டர் செய்தால் உணவுப்பொருள்களை வீடுதேடிக் கொண்டு வந்து கொடுக்கும் ஸொமாட்டோ நிறுவனம், நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய 15 நிமிடத்தில் உணவை வழங்கும் சேவையை சப்தமில்லாமல் ந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!

பங்குச்சந்தை இன்று(மே 2) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,300.19 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.40 மணியளவில், சென்செக்ஸ் 233.4... மேலும் பார்க்க

குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த மாா்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

37 மடங்கு வலிமைமிக்க உலகின் முதல் எஸ்டி கார்டு! துருப்பிடிக்காத உலோகத்தில்..!

துருப்பிடிக்காத உலோகத்தில் உலகின் முதல் எஸ்டி கார்டை லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.எஸ்டி கார்டு (SD card)பயன் என்ன?எஸ்டி கார்டு (SD card)என்பது நினைவகத்தை சேமித்து வைக்கப் பயன்படுகிறது. இது கே... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி 20% ஆக உயர்வு: மத்திய அரசு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்பட... மேலும் பார்க்க

19 சதவீதம் உயா்ந்த வாகன ஏற்றுமதி

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்... மேலும் பார்க்க