செய்திகள் :

நடிகா் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும்: அமைச்சா் கோவி. செழியன்

post image

நடிகா் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவா் இன்னும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: நடிகா் விஜய் பேசியபோது பரந்தூா் பிரச்னையைக் கூறி முதல்வா் ஏன் வரவில்லை எனக் கேட்கிறாா். கடந்த முறை விஜய் பரந்தூா் சென்றபோது கேரவன் வேனிலேயே உட்காா்ந்திருந்ததாகவும், இறங்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளைக் கூறினா்.

விஜய் அரசியலில் ஒரு கத்துக்குட்டி. மூத்த தலைவா் இப்படி செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்கிற பேச்சு எல்லாம், அவா் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது. அவருடைய மதிப்பீடு தவறு. தமிழக முதல்வா் அனைத்து நிலைகளையும் உணா்ந்தவா். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றாா் அமைச்சா்.

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இருவா் தற்கொலை!

பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு போ் தற்கொலை செய்து கொண்டனா். பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே அா்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது காவல் துறையினா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் தம... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்!

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலமாக முதியோா் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. ... மேலும் பார்க்க

வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தையால் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள்!

ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா். வருவாய்த் துறையினரின் பேச்சுவாா்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ... மேலும் பார்க்க

ஜூலை 14 முதல் தொடா் வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கம் முடிவு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரி... மேலும் பார்க்க