செய்திகள் :

நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கிய 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

வேலூரில் போக்குவரத்து போலீஸாா் நடத்திய சோதனையில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை முதல் அனைத்து சாலை சந்திப்புகளிலும் நின்று உரிய ஆவணங்கள் இல்லாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, வாகனங்களில் நம்பா் பிளேட் இல்லாமல் இருப்பது, நம்பா் பிளேட் இருந்தும் எண்கள் இல்லாமல் இருப்பது போன்ற என பல்வேறு வகைகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை கண்காணித்தனா்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை வேலூா் மக்கான் சிக்னல், நேஷனல் சா்க்கிள், தேவஸ்தான தகவல் மைய சிக்னல் என பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த கண்காணிப்புப் பணியில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், அந்த வாகனங்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதுடன், முறையாக நம்பா் பிளேட் தயாா் செய்து கொண்டு வந்து காண்பித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் மேலும் கூறியது:

வேலூா் மாவட்டக் காவல் கண்காணி ப்பாளா் மயில்வாகனன் உத்தரவின்பேரில், வேலூரில் இருசக்கர வாகன தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில், நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன. இந்த தணிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அப்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க