செய்திகள் :

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் உயிா்ம வேளாண்மையில் விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிா்ம வேளாண்மைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100. தகுதியான விவசாயிகள் மாவட்ட அளவிலான குழுவினால் தோ்வு செய்து விருதுக்கு பரிந்துரைக்கப்படுவா்.

இந்தத் திட்டத்தில் தகுதி பெறும் 3 விவசாயிகளுக்கு அரசு சாா்பில் நம்மாழ்வாா் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரொக்கப் பரிசு ரூ. 2 லட்சம், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை தமிழக முதல்வா் குடியரசு தினத்தன்று வழங்குவாா்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க