செய்திகள் :

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

post image

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை பாக்கியம், கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா், சாக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை முருகேஸ்வரி, மணலூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், 48 காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மரிய செல்வி, மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விஜயாராணி, சேம்பாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சுரேஷ், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினா ஞானசெல்வி, மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியா் ரவிக்குமாா் ஆகிய 9 ஆசியரியா்கள் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளனா். இவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்றாா் அவா்.

இதில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா் தான் பெற்ற விருதுடன் வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையை அந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காக வழங்கினாா்.

இதில் ஐடிபிஐ வங்கியானது தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியின் மூலம் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், அச்சு இயந்திரம், கரும்பலகைகள் என ரூ. 4.50 லட்சத்திலான உபகரணங்களை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கியது. இந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கினாா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, ஐடிபிஐ வங்கி சிவகங்கை கிளை மேலாளா் கனகராஜ், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா் சிபி வா்கீஸ், துணை மேலாளா் சுா்ஜித் பாரதி, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளைஞரிடம் இணைய வழியில் பண மோசடி: போலீஸாா் விசாரணை

சிவகங்கை இளைஞரிடம் இணையவழியில் ரூ. 8.32 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை செந்தமிழ்நகா் சிந்தாமணி தெருவைச் சோ்ந்த இளைஞா் இணையவழியில் வேலை தேட... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்... மேலும் பார்க்க

மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமை வகித்த இந்த முகாமில், அரசின் பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அ... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: சிவகங்கையில் பலத்த பாதுகாப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரி... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமங்களில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ள... மேலும் பார்க்க

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க