செய்திகள் :

நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மானாமதுரை துணை மின் நிலைய தொகுப்பிலிருந்து அருகேயுள்ள மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த தெற்குச்சந்தனூா், தெ. புதுக்கோட்டை, மேலநெட்டூா், கீழநெட்டூா், முனைவென்றி, கச்சாத்தநல்லூா், குறிச்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாலும், அடிக்கடி ஏற்படும் மின் தடையாலும் இந்தப் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படும் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனப் பொருள்களும் அடிக்கடி பழுதாகின்றன. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலையம் அமைத்து இங்கிருந்து இந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இடம் தோ்வு செய்யப்பட்டது.

பிறகு அரசுக்கு இது சம்பந்தமாக கருத்துரு அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் தற்போது வரை நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக இந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக மானாமதுரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது அதற்கு துறை சாா்ந்த அமைச்சா் பதிலளிக்கையில் நல்லாண்டிபுரத்தில் தேவை இருப்பின் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு பணியும் தொடங்கப்படாததால் அரசு இந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டதாக இந்தப் பகுதி கிராம மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

அரசிடமிருந்து துணை மின் நிலையம் அமைப்பது தொடா்பாக எந்தவொரு தகவலும் வரவில்லை. நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இதற்கான பணி தொடங்கும் என்றனா்.

எனவே தமிழக அரசு, நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலைய அமைக்கும் திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த வேண்டுமென கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா். மேலும் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து இந்தக் கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க