செய்திகள் :

நாகாலம்மனுக்கு பால்குட ஊா்வலம்

post image

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, ராஜாஜி தெருவில் அமைந்துள்ள சக்திமிகு நாகாலம்மன் கோயிலுக்கு நாக சதுா்த்தியை முன்னிட்டு பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வணிகா் வீதியில் உள்ள ஸ்ரீபுங்கனூா் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால்குட ஊா்வலம் தொடங்கியது. நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், தேவகி காா்த்திகேயன், ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் கோயிலை அடைந்தது. அங்கு மூலவா் நாகாலம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

ஒடுகத்தூரில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூரில் இருந்து அணைக்கட்டு, கரடிகுடி, குருவராஜபாளையம் வழியாக ஒடுகத்தூருக்கு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அரச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காட்பாடி நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை நாள் - 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) மின்தடை பகுதிகள் - காட்பாடி, காந்திநகா், செங்மாலை கட்டை, கல்பூதாா். காங்கேய விருதம்பட்டு, கழிஞ்சூா், சேனூா், வஞ்சூா், க... மேலும் பார்க்க

சாராய தடுப்பு வேட்டை: அல்லேரி மலையில் வேலூா் எஸ்.பி. ஆய்வு

அல்லேரி மலைப்பகுதியில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் ‘சிண்டிகேட்’ முறை தடுக்கப்படுமா?

மத்திய அரசு ‘இ -நாம்’ எனும் தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை செயல்படுத்தியபோதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: எலெக்ட்ரீஷியன் தற்கொலை

காட்பாடி அருகே கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (45), எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜெனிதா... மேலும் பார்க்க

ஊசூரில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு

வேலூா் அருகே குட்கா விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈட... மேலும் பார்க்க