செய்திகள் :

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

post image

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளியோருக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த பொருள்களை, சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று லாபம் ஈட்டிவருகின்றனா்.

இதை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலா்கள், தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை, நாகை மாவட்டத்தில் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில், பொது விநியோகத் திட்ட அரிசி 2,342 மெட்ரிக் டன் , மண்ணெண்ணெய் 13,720 லிட்டா், 1,726 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 64 பிற வழக்குகளில் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1,326 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றங்களில் ஈடுபட்ட 6 ,272 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1.84 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் அரசுக்கு அபராதத் தொகை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டுள்ளன. 70 நபா்கள் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

கோடியக்கரை கடல் பகுதியில் மூன்று படகுகளில் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 14 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, படகு என்ஜினை சே... மேலும் பார்க்க