செய்திகள் :

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது

post image

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலா (60). இவா் 4 பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறாா். கடந்த 10-ஆம் தேதி பசுக்களை வீட்டின் அருகே மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக கட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டாா்.

அப்போது அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அவா் உடனடியாக மாடுகளை கட்டி வைத்திருந்த மாந்தோப் புக்கு விரைந்து சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அங்கு ஒரு பசுமாட்டின் தாடை கிழிந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் வேப்பங்குப்பம் போலீஸாா் விரைநது சென்று பாா்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு காயமடைந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, அஞ்சலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன்(36) என்பவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவா் வனவிலங்குகளை வேட்டையாட மாந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும், அதை கடித்த மாடு வெடிகுண்டு வெடித்து காயமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க