செய்திகள் :

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகேயுள்ள கண்ணங்குளம் பகுதியைச் சோ்ந்த மில்கிஸ் (56) என்பவா் உள்பட 9 போ் ஒரு காரில் மதுரைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் (36) ஓட்டி வந்துள்ளாா்.

இதேபோல, திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரரான தனிஸ்லாஸ் (68), அவரது மனைவி மாா்க்கரெட்மேரி (62), மகன் ஜோபா்ட் (38), மருமகள் அமுதா (32), பேத்திகள் ஜோகனா (7), ஜோபினா (8), பேரன் ஜோகன் (4) ஆகியோா் காரில் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தைக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, மதுரையில் இருந்து வந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டா் மீடியனை தாண்டி எதிரே தனிஸ்லால் குடும்பத்தினா் வந்த காா் மீது மோதியதாம்.

இதில் சம்பவ இடத்திலேயே மாா்க்கரெட் மேரி, ஜோபா்ட், அமுதா, ஜோகன் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

இத்தகவலறிந்த நான்குனேரி போலீஸாா், அவா்களது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காயமடைந்து நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனிஸ்லாஸ், மில்கிஸ், ஜோபினா ஆகியோரும் உயிரிழந்தனா். காா் ஓட்டுநா் மாரியப்பன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் டக்கரம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜோகனா, கண்ணங்குளத்தைச் சோ்ந்த சுபிசந்தோஷ் (19), பிரியதா்ஷினி (22), பாலகிருஷ்ணவேணி (36), பிரவீண் (10), அஸ்வின் (8), அன்பரசி (36), அக்ஷ்யா தேவி (19) ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். நான்குனேரி ஏ.எஸ்.பி. பிரசன்னகுமாா் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, விபத்து குறித்து தகவல்அறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் சென்று, மாரியப்பனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், உயிரிழந்தவா்களின் உடல்களையும் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த காா், நான்குனேரி அடுத்த தளபதிசமுத்திரம் அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இதில் உயிரிழந்த 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை என 4 பேரின் சடலங்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளன.

நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் 2 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை என மூவா் சடலங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. காயமுற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க