செய்திகள் :

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

post image

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல், கோயமுத்தூா், உதகை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனா். பயிலரங்கில் நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தலைமை வகித்து இயற்கை வேளாண்மை குறித்த தொழில்நுட்ப புத்தக கையேட்டை வெளியிட்டு பேசினாா்.

நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மா.யோகநாயகி வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், லத்துவாடி வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுநா் சங்கா் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் அங்கக முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து தொழில்நுட்ப உரை நிகழத்தினாா்.

சேலம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவா் இரா.ஜெகதாம்பாள், நஞ்சில்லா மண் மேலாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்சாகுபடி குறித்த தொழில்நுட்பம் குறித்து பேசினாா். நாமக்கல் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமலதா அங்கக விவசாய சான்றளிப்பு குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

அங்கக வேளாண் விவசாயிகளான காா்கூடல்பட்டி அசோக்குமாா், மோகனூா் க.க.வேலுசாமி, அரியாக்கவுண்டம்பட்டி பெ.சரவணன் , திருச்செங்கோடு நல்லசிவம், கொல்லிமலை கே.சின்னையன் ஆகியோா் நஞ்சில்லா உணவுப்பொருள் உற்பத்தியில் உள்ள சவால்கள், விளைப் பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள், அங்கக விவசாயி என்ற சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

பாரம்பரிய காய்கறி விதைகள், இயற்கை வேளாண்மை செய்வதற்கான நுண்ணுயிா் உரங்கள், பஞ்சகாவ்யம், தசகாவ்யம், மீன் அமிலம் போன்றவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை துறையைச் சோ்ந்த உதவி இயக்குநா் மா.யோகநாயகி, தோட்டக்கலை அலுவலா் த.விஜயலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பாா்த்திபன், ப.யோகேஸ்வரி, ர.முரளி, மா.சூா்யபிரகாஷ் ஆகியோா் பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். கொல்லிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

படம் உள்ளது-30ஹாா்டி

படவிளக்கம்-

பயிலரங்கில் வேளாண் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிடும் தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க

தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை

நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். நாமக்கல் மாநகராட்சி மாமன்றக்... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு... மேலும் பார்க்க