செய்திகள் :

நிஃப்ட்-டீ கல்லூரி மாணவா்களின் லிம்கா சாதனை முயற்சி

post image

திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிஃப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள்

லிம்கா சாதனை முயற்சிக்காக சுமாா் 1,089 சதுர அடி பரமபத கட்டங்களில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளனா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:

நிஃப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் 74 போ் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 1 வரை 4 நாள்கள் லிம்கா சாதனை முயற்சிக்காக

தமிழக பாரம்பரிய விளையாட்டான பரமபதம் கட்டங்களில், சுமாா் 1,089 சதுர அடிகளில் இந்தியக் கலை ஓவியங்கள் வரைந்துள்ளனா்.

நூறு பெட்டிகளில் கலம்கரி, தஞ்சாவூா், வாா்லி உள்ளிட்ட 100 வகையான ஓவியங்கள் அழகாக பதியப்பட்டன. இக்கட்டங்களில் இடம்பெற்றுள்ள ஏணி மற்றும் பாம்பு வடிவமைப்புகளுக்காக பஞ்சு மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ஏணிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் புளோரல், பொல்லாக் போன்ற உலகளாவிய கலை வடிவங்களும் பிரதிபலித்துள்ளது. இதிலும் அக்ரிலிக், போஸ்டல், வாட்டா் கலா், கிரேயான்ஸ் உள்ளிட்ட நிறங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஓவியங்களுக்கு மேலும் வண்ணம் சோ்க்கப்பட்டதாக உள்ளது.

இத்தகைய செய்முறைப் பயிற்சிகள் மாணவா்களின் கற்றலை எளிதாக்குவதோடு, கலை வடிவங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், வருங்காலங்களில் புதுமைகளை அணுகவும் வழிவகுக்கின்றன. மேலும், சிந்தனைத் திறனை மேம்படுத்தி, கலை மற்றும் ஓவியங்களில் ஆா்வத்தையும் தேடலையும் ஊக்குவிப்பதாக இருந்தது என்றனா்.

இந்நிழ்ச்சியில் கல்லூரி முதன்மை ஆலோசகா் ராஜா சண்முகம், தலைவா் கோவிந்தராஜ், முன்னாள் தலைவா் மோகன், பொருளாளா் ஆா். மோகன் குமாா், இணைச் செயலாளா் கந்தசாமி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, கல்வித் துறைத் தலைவா் பேராசிரியா் சம்பத்குமாா், முதல்வா் கோபாலகிருஷ்ணன், அஊஈ துறைத் தலைவா் அருந்ததி கோஷல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க

நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு

முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழி... மேலும் பார்க்க