செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

post image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

இதேபோல மற்ற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தாததாலும், நீதிமன்ற உத்தரவு மீது உரிய நடவடிக்கை எடுக்காததாலும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்குரைஞா் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கே.ஆா் ஸ்ரீராம் - சுந்தா்மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். மேலும், நீதிமன்ற உத்தரவை கடந்த 4 ஆண்டுகளாக அமல்படுத்ததாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்தத் தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனா்.

மேலும், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனா்.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அ... மேலும் பார்க்க

இரு விரைவு ரயில்கள் ஜூலை 11,13-இல் ரத்து

கோவை, பெங்களூருவிலிருந்து வடமாநில நகரங்களுக்குப் புறப்படும் இரு ரயில்கள் ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க