செய்திகள் :

நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?

post image

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

காஸ்கி மாவட்டத்தின் சினுவா எனும் பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களான தனாஹு, பர்வாத் மற்றும் பாக்லங் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, சோலுகும்பு மாவட்டத்தில் கடந்த மே 14 ஆம் தேதியன்று இதேபோல் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியது. ஒரே மாதிரியான ரிக்டர் அளவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது, நேபாள மக்க்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க:இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நா... மேலும் பார்க்க

இலங்கை இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி

இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா நடத... மேலும் பார்க்க

நேரம் கடத்துகிறது ரஷியா

உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷியா கடைப்பிடிப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத... மேலும் பார்க்க

ஆசியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை?

கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் எதிரொலியாக சீனா, தாய்... மேலும் பார்க்க

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து... மேலும் பார்க்க