செய்திகள் :

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் இயங்கி வரும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (பா்கூா் கூட்டுறவு தொழில் பயிற்சி நிலைய வளாகம்) 2025-2026-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்கான பயிற்சி பெற ஏப். 13-ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி 40 மணி நேர வகுப்பறை பயிற்சி, 60 மணி நேர செயல்முறை பயிற்சி என மொத்தம் 100 மணி நேர பயிற்சியாகும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், இந்தப் பயிற்சியில் சோ்ந்து, விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ. 4,550 மட்டுமே. பயிற்சி ஏப்.15-ஆம் தேதி தொடங்குகிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 17 நாள்கள் ஒரு பிரிவாகவும், சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என 17 நாள்கள் என மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் நகைக் கடன், வட்டி கணக்கிடுதல், ஹால்மாா்க் தர முத்திரை, நகை அடகு பிடிப்போா் சட்டம்-1943, தரம், விலை மதிப்பீடு, நகை மதிப்பீட்டாளரின் கடமைகள் பொறுப்புகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முறைகள், பிஐஎஸ் செயலி மூலம் தினசரி நகையின் விலை அறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அனைத்து நகைக்கடன் வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நகைக் கடன் வழங்கும் தனியாா் வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04343-265652 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் 2,000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்... மேலும் பார்க்க

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி

ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகரா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா... மேலும் பார்க்க

நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்: சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி அ... மேலும் பார்க்க