செய்திகள் :

படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!

post image

நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கீழையூா் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவி செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவா் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு, மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில்... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழையூா் மேற்கு ... மேலும் பார்க்க

திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ... மேலும் பார்க்க