செய்திகள் :

பண முறைகேடு புகாா்: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

பண முறைகேடு புகாா் தொடா்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழை வழங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக புகாா் கூறப்பட்டது.

அதுதொடா்பாக 2020-ஆம் ஆண்டு அக். 14-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூா் மண்டல அதிகாரி எம்.பன்னீா்செல்வம் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினா். அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சம் ரொக்கம், வீட்டில் இருந்து ரூ.3.25 கோடி ரொக்கம், 450 பவுன் தங்கநகையும், ஆறரை கிலோ வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இதன் அடுத்த கட்டமாக, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் எஸ்.பாண்டியனின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2021-ஆம் ஆண்டு டிச. 16-ஆம் தேதி சோதனை செய்தனா். அப்போது, அங்கிருந்து கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள்,வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இவ் வழக்கில் சட்ட விரோத பண முறைகேடுக்கான முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அதில், பண முறைகேடு தொடா்பாக சில முக்கிய ஆவணங்களும், தடயங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

10 இடங்களில் சோதனை: அதனடிப்படையில் சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள பாண்டியன் வீடு, கே.கே.நகா் டாக்டா் ராமசாமி சாலையில் உள்ள ஒரு மருத்துவா் வீடு, கோயம்பேடு ஜெயாநகா் 8-ஆவது தெருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம், சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனி தெற்கு மாட தெருவில் உள்ள ஒரு தொழிலதிபா் வீடு,அசோக்நகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவன அலுவலகம்,வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி பகுதியைச் சோ்ந்த உணவக உரிமையாளா் வீடு, அவரது அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினா் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டிருந்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் புகாா் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க