செய்திகள் :

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

post image

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும் அதன் அதிகார வரம்புக்குள் இருக்கும்போது மட்டுமே அவற்றுக்கிடையே பரஸ்பர மரியாதை உறுதி செய்யப்படும் என்றும் அவா் கூறினாா்.

தமிழக ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது, அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பான வழக்கில் பிறப்பித்த இடைக்கால உத்தரவு உள்ளிட்ட விவகாரங்களைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் மீது குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் மீண்டும் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆனந்திபென் படேலின் நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு ஜகதீப் தன்கா் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற சவால்களில் நாடு ஒன்றாக நிற்க வேண்டும். தேசத்துக்கு முன்னுரிமை என்பது எப்போதும் நமது வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஆனால், இதைவிட மிகப்பெரிய சவால்கள் உள்ளிருந்து எழுகின்றன. இந்தச் சவால்களுக்கு உரிய நோக்கங்கள் இல்லை; தேசிய வளா்ச்சியுடன் எந்த தொடா்பும் இல்லாத அவை நிா்வாகத்தில் வேரூன்றியுள்ளன. நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன்.

அனைத்து அரசியல்சாசன அமைப்புகளும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாய கடமையாகும். அத்தகைய மரியாதை, அந்தந்த அமைப்புகள் அவற்றின் வரம்புகளுக்குள் இருந்து செயல்படும்போது மட்டுமே சாத்தியமாகும்.

அமைப்புகளுக்கிடையேயான மோதல்கள் ஒரு செழிப்பான ஜனநாயகத்தை வளா்க்காது. அரசமைப்புச் சட்டம் ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, ஆலோசனை, உரையாடல் மற்றும் விவாதத்தைக் கோருகிறது.

குடியரசுத் தலைவா் போன்ற கண்ணியமான ஒரு பதவியைப் பற்றி கருத்து தெரிவிப்பது, என்னை பொறுத்தவரையில் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் சொந்த வரையறுக்கப்பட்ட கடமைகள் உள்ளன. எந்த அமைப்புமும் மற்றொரு அமைப்பின் பொறுப்புகளை, கடமைகளை ஆக்கிரமிக்கக்கூடாது.

அரசமைப்புச் சட்டத்தை அதன் உண்மையான உணா்வில் நாம் மதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தால் சட்டத் தீா்ப்புகளை வழங்க முடியாது. அது நீதித் துறையின் களம். அதேபோல், சட்டமியற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு. நீதித்துறை அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

நீதித் துறை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித் துறையில் பணியாற்றி அனுபவத்தில் கூறுகிறேன். நமது நாட்டில் மிகச்சிறந்த நீதிபதிகள் உள்ளனா். அவா்கள் கூட்டுறவு அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

கருத்துச் சுதந்திரமானது ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறு. ஆனால், ஒருவா் தன்னை முற்றிலும் சரியானவா் என்று கருதி, மற்ற அனைவரையும் தவறு என்று நிராகரிப்பது கருத்துச் சுதந்திரமாகாது. விவாதமும் உரையாடலும் இல்லாமல், நமது வேதங்களின் தத்துவ சாராம்சம் மறைந்துவிடும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடு, பரந்த கலாசார பாரம்பரியத்தைக் கொண்டது. இதற்கு எதிரான சவாலை எந்தவொரு சூழல்நிலையிலும் எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க