செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

post image

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா, மாநில அரசாங்க அழைப்பின் பேரில் கேரளாவுக்கு வந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜோதி மல்ஹோத்ரா, Travel with Jo என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த இவர், 2024–2025 இல் கேரளா சுற்றுலாத்துறை நடத்திய ‘influencer’ பிரச்சார திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அந்த திட்டத்தின் கீழ் அவரது பயணம், தங்குமிடம் மற்றும் சுற்றுலா செலவுகள் அனைத்தும் கேரளா அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இது கேரளா மாநிலத்தை, உலகளவில் பிரபலமான சுற்றுலா இடமாக்குவதற்கான முயற்சியாகும்.

பாகிஸ்தானுடன் சந்தேகத்திற்கிடமான தொடர்புகள்?

இந்திய உளவுத்துறையின் தகவலின்படி, ஜோதி மல்ஹோத்ரா கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். அங்கு பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து தகவல்கள் வழங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உளவு

பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் உளவுத்துறையின் உதவியுடன் செயல்பட்டதாக சந்தேகத்தின் பேரில் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பில் உளவுத்துறை

இந்த சம்பவம், அரசு நிதியில் நடத்தப்படும் பிரச்சாரங்களில் பங்கேற்கும் சமூக வலைதள பிரபலங்களுக்கான பின்னணி சோதனை முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜோதி மல்ஹோத்ரா யூடியூப் சேனலில் 487 வீடியோக்கள் உள்ளன.

ஜோதி மல்ஹோத்ரா

அவை பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து மற்றும் இந்திய மாநிலங்களை பற்றிய பயண வீடியோக்களாக இருந்தாலும், தற்போது அவை உளவுத்துறை கண்காணிப்பில் உள்ளன. பயண வீடியோக்களின் பெயரில் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டிருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கைது, அரசு திட்டங்களில் பங்கேற்கும் நபர்களை சரிவர பரிசோதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் உள்ளதா? என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்... மேலும் பார்க்க

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக... மேலும் பார்க்க

Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம்" - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலைய... மேலும் பார்க்க

Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்கு கடும் எதிர்ப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா (Anastasia Luchkina) கிரிமியாவில் உள்ள டைகன் சஃபாரி பார்க் என்ற வன விலங்கு பூங்காவில் ஓராங்குட்டான் குரங்குக்கு ஈ-சிகரெட் புகைக்கக் கொடுத்தது க... மேலும் பார்க்க

``ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' - குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!

இப்போதைய உலகின் மந்திரச் சொல் 'AI, ChatGPT'. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, ந... மேலும் பார்க்க

மகனுக்கு நகைகள் போட்டு அழகு பார்த்து உயிரை மாய்த்த குடும்பம்.. சொத்து பிரச்னையால் சோகம்

ராஜஸ்தானில் சொத்து பிரச்னையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. அங்குள்ள பார்மர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவ்லால்(35). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பஜ்ரங்(9), ராம்தேவ்(8) ஆகிய இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க