செய்திகள் :

பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

post image

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே அந்த அணி சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயல்படாததற்கு முக்கிய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் ஐபிஎல் தொடரில் இடம்பெற்று விளையாடினர். அதன் பின், அந்த ஆண்டின் பிற்பகுதியில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை மிஸ் செய்வதாகவும், ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடாததன் காரணமாகவே சர்வதேசப் போட்டிகளில் அதனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனவும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடுவதை நாங்கள் உண்மையில் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியிருந்தால், கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் பாகிஸ்தானின் வியாபாரம் என இரண்டுமே அதிகரித்திருக்கும். எங்களது வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால், அதனை கண்டிப்பாக எங்களது நாட்டில் யாராவது ஒளிபரப்ப முன்வருவார்கள்.

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவினை பாருங்கள். அவர்களது நாட்டிலிருந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள். பாட் கம்மின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ககிசோ ரபாடா போன்ற உலகத் தரத்திலான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

ஐபிஎல் தொடரின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. முதலில் ரஷித் கான் ஐபிஎல் தொடரின் மூலம் வெளி உலகிற்கு அதிக அளவில் தெரியத் தொடங்கினார். தற்போது, நூர் அகமது, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ஃபஸல்ஹக் ஃபரூக்கி போன்ற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது, சர்வதேசப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் என்றார்.

அண்மையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, இரண்டு தொடர்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!

நீண்ட நாள் காதலியான மோனிகாவைக் கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்.ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து ... மேலும் பார்க்க

காயத்திலிருந்து குணமடைந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்கள்.பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் க... மேலும் பார்க்க

ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!

ரசிகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை தாக்க முயன்ற பாகிஸ்தான் வீரரை பாதுகாவலர் தரதரவென இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஹாரி புரூக்!

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழு... மேலும் பார்க்க

இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி2... மேலும் பார்க்க

மும்பையை வென்றது லக்னௌ

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவ... மேலும் பார்க்க