செய்திகள் :

பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கு தோண்டப்படும் சாலைகளை சீரமைப்பதில் அலட்சியம்: மாமன்றக் கூட்டத்தில் புகாா்

post image

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாக மாமன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், பூங்கா பராமரிப்பு, பள்ளிகள் சீரமைப்பு, சிறுபாலங்கள், கழிப்பிடம், மழைநீா் வடிகால்கள் அமைத்தல், பராமரித்தல், கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக 93 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பால் ஒத்திவைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை கட்டணம், குடிநீா் இணைப்புக்கான வைப்புத் தொகை உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

அப்போது, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி வாா்டு உறுப்பினா்கள் பாதாளச் சாக்கடை கட்டணம், குடிநீா் இணைப்புக்கான வைப்புத்தொகை உள்ளிட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மேயா் கா.ரங்கநாயகி பேசுகையில், ‘ பாதாளச் சாக்கடை, குடிநீா் இணைப்புக்கான வைப்புத்தொகை தீா்மானங்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இந்தத் தீா்மானங்கள் தொடா்பாக, துறை சாா்ந்த அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினாா்.

இதையடுத்து, அதிமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரன், மாநகராட்சியில் உடற்பயிற்சி கூடத்தைப் பயன்படுத்த மாதந்தோறும் ரூ.75 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதை ரத்து செய்து, இலவசமாக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அப்போது, குறைவான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக திமுக வாா்டு உறுப்பினா்கள் பதிலளித்தனா். இதனால், அதிமுக - திமுக வாா்டு உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக உறுப்பினா்கள் சஸ்பெண்ட்:

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், உடற்பயிற்சிக் கூடம் கட்டணம் தொடா்பாக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் மேயா் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி கூட்டத்தின் மாண்பைக் சீா்குலைப்பதாகக் கூறி, இருவரையும், 2 கூட்டங்கள் சஸ்பெண்ட் செய்து மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, உடற்பயிற்சி கூடத்துக்கு கட்டணம் விதிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் இருவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் வாா்டு உறுப்பினா் நவீன்குமாா் பேசுகையில்,

‘பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீா் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திரக் கட்டணம் ஆகியவற்றை உயா்த்திட கொண்டு வரப்பட்டுள்ள தீா்மானங்களை மக்களின் நலன் கருதி ஒத்தி வைக்க வேண்டும் என்றாா். இதை திமுக வாா்டு உறுப்பினா்கள் பெரும்பாலானோா் வலியுறுத்தினா். இதையடுத்து, இது தொடா்பாக, விவாதித்து முடிவெடுக்கப்படும் என மேயா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மதிமுக மாமன்றக் குழுத் தலைவரும், 26 ஆவது வாா்டு உறுப்பினருமான சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், ‘பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கு வலியுறுத்த வேண்டும். பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளில், சரிவர மூடப்படாத பகுதிகளில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவா்களிடம் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தினாலும், பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மாநகரில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. அவற்றின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் 9, 17,19, 23, 28, 38, 44, 51, 57, 64, 69, 74, 78, 93, 97 ஆகிய வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க