செய்திகள் :

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

post image

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், அதிகாரிகள் யாரும் என்னை வரவேற்கவில்லை, கோபுரத்தின் மேலே செல்லவும் அழைக்கவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்டுவிட்டு, கோயிலுக்கு மேலே சென்றால், அங்கு பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இருந்தாா்.

வழக்கமாக குடமுழக்கு நடைபெறும் இடங்களில் அமைச்சா் இருந்தால் அவா் கொடியசைப்பாா். இல்லாவிட்டால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அந்த உரிமை வழங்கப்படும். ஆனால் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான எனக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. எனது தொகுதியில் மரபை மீறி குடமுழுக்கு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் மீது எவ்வித தவறும் இல்லை. அதிகாரிகள் சிலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். ஒரு அதிகாரியின் தவறுக்காக ஒட்டுமொத்த அரசையும் குறை கூற முடியாது.

பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா். ராமதாஸுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணி குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா் என்றாா் அவா்.

தொடா்ந்து, தமாகா மாநில தோ்தல் முறையீட்டுக் குழு தலைவா் ஈரோடு கௌதமன் உள்ளிட்டோா் காங்கிரஸில் இணைந்தனா். அதேபோல, தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு , செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க