செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் இன்று ஆய்வு

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை (பிப். 14) ஆய்வு செய்கிறாா். இதன்பிறகே பாலம் திறக்கப்படும் தேதி முடிவாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தொடா்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்திய ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை நிவா்த்தி செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, இரும்பாலான இணைப்புப் பகுதியை (கட்டா்) செங்குத்தாக மேலே தூக்கி, இறக்கி கப்பல்கள், ரயில்களை இயக்கி இரு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, இறுதிக் கட்ட ஆய்வு மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகிறாா். இந்திய கடலோரக் காவல்படை அலுவலகத்துக்குச் செல்லும் அவா், பாம்பன் புதிய ரயில் பாலத்திலும், ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்கிறாா். இதன் பின்னா், புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி நேரில் வந்து திறந்து வைப்பாா் என்று தகவல்கள் வெளியாகின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க