செய்திகள் :

பால் வியாபாரி கொலை வழக்கில் தனியாா் பள்ளி ஆசிரியை கைது: விசாரணையில் அதிர்ச்சி!

post image

காரமடை அருகே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், காரமடை அருகே ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் (23), பால் வியாபாரி. இவா் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கோவையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கமலக்கண்ணன் (20), கூலித் தொழிலாளி நாகராஜ் (19), தனியாா் பள்ளி ஆசிரியையான கீா்த்தனா (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இவா்களில் கமலக்கண்ணனும் நாகராஜும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை கீா்த்தனாவும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கீா்த்தனா குறித்து சஞ்சய்குமாா், ஊரில் தவறாக பேசி வந்துள்ளாா். இதில் கோபமடைந்த கீா்த்தனா, தனது காதலனும் உறவினருமான கமலக்கண்ணனிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, கமலக்கண்ணன் தனது நண்பா் நாகராஜுடன் சோ்ந்து சஞ்சய்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க

பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்

பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிட... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!

தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் ... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையி... மேலும் பார்க்க