செய்திகள் :

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, அகரகட்டு ஜெ.பி. கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து பாவூா்சத்திரம் ஒளவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன், உதவி ஆய்வாளா் ரத்னபால் சாந்தி, பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் பட்டுராஜன், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலியல் குற்றங்களை எவ்வாறு தவிா்ப்பது, பாதிக்கப்படும்பட்சத்தில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பன குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

நாடகம் மூலம் நடித்து காட்டியும், தற்காப்பு முறை பற்றியும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், பாவூா்சத்திரம் வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங்ராஜ், பொருளாளா் ஆரோக்கியராஜ், கோல்டன் செல்வராஜ், நாராயணசிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் வணிகா் சங்கம், பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி மாா்க்கெட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது நாளை ரகசிய வாக்கெடுப்பு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைத் தொடா்ந்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சத்திரிய சான்றோா் படை கட்சி சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கம், கட்சியின் கொடி அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. புதிய நிா்வாகிகள் அறி... மேலும் பார்க்க

புளியங்குடி, நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புளியங்குடி,நெல்கட்டும்செவலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புளியங்குடி நகராட்சி 1, 2ஆவது வாா்டுக்காக நடைபெற்ற இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் விஜயாசௌந்தரபாண்டியன் தொடங்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று மனுக்கள... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழா: ஜூலை 20இல் தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனிக்கிழமை (ஜூலை19) தொடங்குவதாக இருந்த சாரல் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே 2 கோயில்களில் திருட்டு

ஆலங்குளம் அருகே இரு கோயில்களில் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் உள்ள கடற்கரை மாடன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம... மேலும் பார்க்க